TNPSC தேர்வுகளில் குளறுபடி.. ஒரு மாதத்திற்குள் விசாரணை கமிட்டி அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: TNPSC தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க விசாரணைக் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகளில் குளறுபடிகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

High court order to form committee to prevent malpractice in TNPSC exams

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தும்போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்திற்குள் விசாரணைக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைக்கப்படும் இந்த விசாரணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், டிஎன்பிஎஸ்சி தொடர்பாக உண்மைத் தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+