2021-க்குள் உயர் மின்கம்பிகள், புதைவடங்களாக மாற்றப்படும்... அமைச்சர் தங்கமணி தகவல்
சென்னை: 2021ஆம் ஆண்டுக்குள், சென்னையில் 6,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் பொறுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உயர் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை இந்த ஆண்டுக்குள் அரசு செயல்படுத்துமா என, பேரவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை மாநகரில் 6 ஆயிரத்து 532 கிலோமீட்டர் அளவுக்கு உயர் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படவுள்ளதாகவும், 2 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகர் 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதேபோல, பல்லாவரம் பகுதியில் உயர் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர், தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட பல்லாவரம் தொகுதியில் 102 கிலோமீட்டர் அளவுக்கு மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் (அ) அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முதலீடுசெய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடியில் வலைதளம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications