சென்னை அருகே.. செல்போன் ஆலையில் 42 தொழிலாளர்களிடம் கொரோனா பரவியது எப்படி? பரபர தகவல்கள்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள செல்போன் ஆலையில், ஊழியர்கள் சுமார் 42 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த ஆலை மூடப்பட்டது. இதற்கு பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
செல்போன் ஆலையில், 42 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், மறு உத்தரவு வரும்வரை தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேபோல கார் உற்பத்தி ஆலையிலும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

90 சதவீத ஊழியர்கள்
பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் 50 சதவிகித தொழிலாளர்களுடன் செயல்பட மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னர் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை
பணிக்கு வராத, தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு கணக்கிடப்படும் என்று நிர்வாகம் கூறியதால் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலைகளுக்குள் செல்வோர் சானிட்டைசர் போட்டு கையை கழுவ வைக்கப்பட்டனர்.

காரணம்
செல்போன் ஆலைகளுக்குள் செல்வோர் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்கிறது ஆலை நிர்வாகம். ஆனால், அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் பணியாற்ற அழைக்கப்பட்டது பிரச்சினைக்கு காரணம் என்கிறது அரசு வட்டாரங்கள்.

தொழிற்பேட்டைகள்
இந்த நிலையில்தான், கிண்டி உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. கிண்டி தொழிற்பேட்டையில், 450 தொழிற்சாலைகள் உள்ளன. இவை சிறு, குறு நிறுவனங்கள். எனவே பணியாளர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இருப்பினும், நிறைய தொழிலாளிகள் அச்சத்தால், வேலைக்கு வரவில்லை என்கிறது கள நிலவரங்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications