கஜா புயல் தாக்கம் சென்னையில் எப்படி இருக்கும்?
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சென்னை உட்பட தமிழகத்தின் வட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு, கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்முறை புயலுக்கு பெயர் சூட்டும் பொறுப்பு, தாய்லாந்து நாட்டுடையது என்பதால், அந்த நாடு கஜா என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளது.

கன மழை
வரும் வியாழக்கிழமை, புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இது சென்னை நகருக்கும் பொருந்தும். வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் பெய்யக்கூடும். கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர, தென் தமிழகம், கேரளாவில் சில பகுதிகளிலும் இந்த காலகட்டத்தில் கன மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் இருக்கும் இடம்
இன்று காலை, 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிலோ மீட்டர் தொலைவில், புயல் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 15ம் தேதி வியாழக்கிழமை, தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 14 ஆம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரையிலான கடலோரப் பகுதிகளில் கனமழை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர ஆலோசனை
கனமழையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இன்று உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல மாவட்டங்கள்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது பேஸ்புக் பக்கத்தில் இதுபற்றி கூறும்போது, வட மேற்கு தமிழகத்தில் புயல் காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கனமழையை சந்திக்கும். உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகம்
கேரளாவில் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளது. கஜா புயல் காரணமாக இப்போது ஓரளவுக்கு மழை பொழிவை பெறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் .
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications