அண்ணாவிற்கு ஒன்று என்றதும்.. அண்ணாமலையை தூக்கி எறிந்த அதிமுக.. கொதித்த 3 மாஜிக்கள்தான் காரணமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு 3 மாஜி அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு கொடுத்ததும் இந்த முறிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்ற பாணியில் அண்ணாமலை பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

How did 3 Ex ministers react to the speech of BJP Chief Annamalai against Anna?

அப்போதே அதிமுக - பாஜகவினர் இடையே அது கடுமையான மோதலுக்கு வழி வகுத்தது. ஊழல் செய்தவர்களை தலைவர்களாக வைத்து இருந்த கட்சி என்று அதிமுகவை விமர்சனம் செய்து இருந்தார். . இவர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததை அதிமுகவின் ஜெயக்குமார் போன்றவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலை பேசியது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது.

உச்சம் அடைந்துள்ளது: அதிமுக பாஜக இடையே தற்போது உச்சம் அடைந்து உள்ளது. தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை.

மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.

இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜெயக்குமாரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்து நிலையில், தற்போது அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுகவை நம்பி பாஜக இருக்கும் நிலையில் அதிமுகவின் இந்த முடிவு பாஜகவிற்கு பேரிடியாக மாறி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கு 3 மாஜி அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு கடுமையாக எதிர்ப்பு கொடுத்ததும் இந்த முறிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அண்ணா என்று வந்ததும் அதிமுகவினர் அண்ணாமலையை தூக்கி எரிந்தது பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+