Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியார் கேக் எடுத்து வளர்மதி அக்காவுக்கு ஊட்ட.. கோகுல இந்திராவுக்கு ஓபிஎஸ் ஊட்ட.. கோலாகல அதிமுக

அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சார்பில் இன்று சென்னையில் நடத்தப்பட்ட மகளிர் தினம் கொண்டாட்டம்தான், சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதிமுகவில் சசிகலாவிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற பரபரப்பு காலையில் இருந்தே அரசியல் களத்தில் தொற்றி கொண்டது..

சமீபத்தில் தேனியில் நடந்த அதிமுக கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மறுபடியும் கட்சியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர்த்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அது ஓபிஎஸ்ஸிடமும் வலியுறுத்தப்பட்டது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதையடுத்து, ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.. இந்த 2 விஷயங்களும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதற்கு பிறகு ஓ.ராஜாவை கட்சியில் இருந்து வேறு வழியின்றி நீக்கம் தொடர்பான அறிவிப்பில், ஓபிஎஸ் கையெழுத்து போட்டார் என்றாலும், அவரது உண்மை நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. இந்நிலையில்தான் இன்று சென்னை தலைமை அலுவலகத்தில், மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளதாகவும், இன்றைய தினமே சசிகலா விஷயத்திற்கு ஒரு முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

 இபிஎஸ்

இபிஎஸ்


காரணம், சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்து கொள்ளும் நிலையில், மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், நிச்சயம் சசிகலா விவகாரம்கலந்து பேசப்படும் என்றும் நம்பப்பட்டது.. எதிர்பார்த்தபடியே, மகளிர் தினம் அதிமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொண்டனர்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா, வளர்மதி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.. சசிகலா விவகாரம் பேசப்பட்டு, காரசார விவாதங்கள் இன்றைய தினம் நடக்கும் என்று எதிர்பார்த்தால், நிகழ்ச்சி வேறு மாதிரியாக நடந்து முடிந்துள்ளது.. மகளிர் தின விழாவில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கேக்கை வெட்டி உள்ளனர்..

 வளர்மதி

வளர்மதி

அந்த கேக்கை எடுத்து, வளர்மதிக்கு எடப்பாடி பழனிசாமி ஊட்டினார்.. உடனே ஓபிஎஸ்ஸும் கேக் எடுத்து, பக்கத்தில் இருந்த கோகுல இந்திராவுக்கு ஊட்டினார்.. இதற்கு பிறகு, கோகுல இந்திராவும், வளர்மதியும் கேக் எடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். பிறகு, தொண்டர்களுக்கும் கேக் ஊட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்... தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.. இறுதியில் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, மகளிர் விழா சிறப்பாக முடிந்தது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+