உஷார் மக்களே.. சைரஸ் மிஸ்திரி சம்பவம்.. சீட் பெல்ட் அணியாவிட்டால் ஏர் பேக் ஓபன் ஆகாதா?
சென்னை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், சீட் பெல்ட் எப்படி உயிர்காக்கும்? அதற்கும் ஏர் பேகிற்கும் என்ன தொடர்பு? என்பதை காண்போம்.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று முந்தினம் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதுகாப்பான பென்ஸ் காரில் சென்று அவர் இறந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், லோக்கல் சர்கிள் என்ற நிறுவனம், 10,000 பேரிடம் காரில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக ஒரு வாக்கெடுப்பை மேற்கொண்டது.

சீட் பெல்ட் அணியாத இந்தியர்கள்
அதில், 26 சதவீதம் பேர் மட்டுமே காரின் பின் இருக்கையில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதாக தெரிவித்துள்ளார்கள். இவர்களில் 4 சதவீதம் பேர் காரின் பின் இருக்கையில் இதுவரை அமர்ந்து சென்றதில்லை என்று கூறி இருக்கின்றனர். 70 சதவீதம் மக்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும்போது சீட் பெல்ட் அணிந்ததில்லை என்று தெரிவித்து உள்ளார்கள்.

ஏர் பேக்
பட்ஜெட் கார்கள் தொடங்கி விலை உயர்ந்த சொகுசு கார்கள் வரை விலைக்கு ஏற்ப அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கும். அதில் முக்கியாமானது ஏர் பேக். பெரும்பாலான கார்களில் விலைக்கு ஏற்ப ஏர்பேக்குகளின் எண்ணிக்கை இருக்கும். கார் விபத்துக்கு உள்ளாகும்போது ஏர்பேக் சில மைக்ரோ வினாடிகளுக்குள் பயணிகள் மீது விழுந்து உயிர் காக்கும்.

சீட் பெல்ட் ஏன் முக்கியம்?
இதற்கும் சீட் பெல்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சீட் பெல்டும் ஏர் பேக்கும் ஒன்றாக செயல்படுபவை. இரண்டுக்கும் எலெக்டிரானிக் தொடர்பு இல்லை. வேறொரு காரணம் உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்களில் இரண்டு ஏர் பேக்குகளும், அனைத்து இருக்கைகளில் சீட் பெல்டுகளும் இருக்கும். ஏர் பேக்குகள் இயங்குவதற்கு என சில சென்சார்கள் உள்ளன. சீட் பெல்டுகள் அணிந்து ஒருவர் அமர்ந்திருப்பதை கணக்கில் கொண்டே இந்த சென்சார்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.

உயிர் காப்பான்
விபத்து ஏற்படும்போது முகம், நெஞ்சு, தலை பகுதியை பாதுகாக்க ஏர் பேக் பயணிகள் மீது விழுந்து அழுத்தம் கொடுக்கும். அதே நேரம் சீட் பெல்ட் நாம் நகராமல் அதே இடத்தில் இருக்க உதவும். சீட் பெல்டு அணியாவிட்டால் கார் மோதும்போதோ, கவிழும்போதோ, உருளும்போதோ நாம் சீட்டிலிருந்து நகர்ந்து வேறு இடத்தில் விழுந்து படுகாயமடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏர் பேக் பயணிகள் மீது விழாமல் போகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றனர். சீட் பெல்ட் அணிந்தால் இதை தவிர்த்து ஏர் பேக் உதவியுடன் உயிரை காக்கலாம்.












Click it and Unblock the Notifications