கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! யாரெல்லாம் பயன்பெறலாம்? விதிமுறைகள் என்னென்ன?
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வராக கருணாநிதி இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டது. குடிசை இல்லாத தமிழ்நாடு இலக்கை அடையும் வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு முதல் கட்டமாக ரூ 3500 கோடி செலவில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. இதற்கான நிதியும ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு 3.50 லட்சம் ரூபாய் அரசு நிதி கொடுக்கும். இந்த மூன்றரை லட்சமும் ஒரே தவணையாக கொடுக்காமல் 4 தவணைகளாக கொடுக்கப்படும்.
இந்த பணம் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சொந்தமாக பட்டா வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளை பெற குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடிக்கு கான்கிரீட் வீடு கட்ட வேண்டும்.
புதிய வீடுகள் அனைத்தும் சிமென்ட் மூலம் மட்டுமே கட்டப்பட வேண்டும். மண் சுவர், மண் சாந்து மூலம் கட்டப்படக் கூடாது. புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாது. சொந்தமாக பணம் போட்டு கான்கிரீட் வீடு கட்டி இருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு பெற குடிசை வீடுகளில் வாழ்பவராக இருத்தல் அவசியமானதாகும். குடிசையில் ஒரு பகுதி கான்கிரீட், ஓடு, அல்லது ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெறவே முடியாது. கலைஞர் திட்டத்தில் வீடு கட்ட சிமென்ட், கம்பி வழங்கப்படும். ரூ 3.50 லட்சத்தில் ரூ 3.10 லட்சம் 4 தவணைகளாக கொடுக்கப்படும். மீதமுள்ள 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications