Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடே வியக்கும் "வந்தே பாரத்" ரயில்கள்... சென்னை தொழிற்சாலையில் எப்படி தயாரிக்கிறார்கள்! இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கிய ரூட்களில் வந்தே பாரத் டிக்கெட்கள் உடனே விற்றுத் தீர்வது இதையே காட்டுகிறது. இந்த அட்டகாசமான வந்தே பாரத் பெட்டிகள் எப்படி, எங்கே தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

உலகில் மிகப் பெரிய ரயில் நெட்வோர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இந்திய ரயில்களில் வசதியும் வேகமும் இல்லை போதியளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்தது.

இந்த குற்றச்சாட்டிற்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்திய ரயில்வே உருவாக்கியது தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.. தானியங்கி கதவுகள், முற்றிலும் ஏசி, பயோ கழிப்பறைகள் என்று இந்த வந்தே பாரத் ரயில்கள் முழுக்க ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

How Vande Bharat trains are manufactured in Chennai ICF factory

வந்தே பாரத்: இந்த வந்தே பாரத் ரயில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் 2019, பிப்ரவரி 15இல் இயக்கப்பட்டது. அதன் பின்னர் பல வழித்தடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுக்க விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை சென்னை- பெங்களூர்- மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது மற்றொரு சிறப்பாகும். அதிலும் சென்னை பெரம்பலூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தான் இவை தயாரிக்கப்படுகிறது. அங்கே வந்தே பாரத் ரயில்களுக்கு எனத் தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலை முழுமையாக என்ஜின் முதல் பெட்டிகள் வரை செய்து முடிக்க 2 மாதங்கள் வரை ஆகும்.

எப்படி: கார்களை போலவே, ரயில்களுக்கும் முதலில் Under frame எனப்படும் ரயிலின் கீழ் பக்கத்தை முதலில் தயார் செய்கிறார்கள். அதன் மேல் தான் ரயில் பெட்டியை அமைக்கிறார்கள். அப்போதே இன்னொரு பக்கம் sidewall எனப்படும் ரயிலின் பக்கவாட்டையும் ரெடி செய்கிறார்கள். 22 மீட்டர் நீளத்திற்கு இவை லேசார் கட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. மேலும், இதற்காக அவர்கள் தானியங்கி ரோபோ கட்டரையும் பயன்படுத்துகிறார்கள்.

How Vande Bharat trains are manufactured in Chennai ICF factory

அதன் பிறகு அதில் கதவு, டாய்லெட் பகுதிகள் பிரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தான் நாம் ரயில் பெட்டியைப் போன்ற ஒரு வடிவம் இதற்குக் கிடைக்கும். அதன் பிறகு அந்த பெட்டியை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கே வைத்துத் தான், அதன் சீட், பெயின்டிங் ஆகியவை செய்யப்படுகிறது. ரயில் பெட்டிகள் முழுமை பெறுவதும் இங்கே தான். இவை உரியச் சோதனைக்குப் பின்னர் பயன்பாட்டிற்கு வரும்.

இந்த வந்தே பாரத்தில் பல அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. உதாரணத்திற்குத் தானியங்கி கதவுகளைச் சொல்லலாம். அதன் கன்டிரோல் ஒட்டுமொத்தமாக டிரைவரிடம் மட்டுமே இருக்கும். எங்கே பிளாட்பார்ம் இருக்கிறதோ அங்கே மட்டும் கதவுகள் திறக்கப்படும், கதவுகள் மூடப்பட்ட பின்னரே ரயிலை இயக்க முடியும். இப்படிப் பல வசதிகள் உள்ளன. வந்தே பாரத் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக இதில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+