விசாரணை சரியில்லை.. பாத்திமா மரணம் பற்றி மோடியிடம் பேச போகிறேன்.. தந்தை அப்துல் முடிவு!
எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன் என்று தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன் என்று தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் பேட்டி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஐஐடியில் படித்து வந்த அவர், மனஅழுத்தம் மற்றும் பேராசிரியர்களின் மத ரீதியான பாகுபாடு காரணமாக் தற்கொலை செய்து கொண்டார்.

பாத்திமா தற்கொலை வழக்கு சிசிபிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான தனிப்படை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த தற்கொலை தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாத்திமாவின் தந்தை அப்துல் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எல்லோரும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
எங்களை மட்டும்தான் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. குற்றவாளிகளை எதுவும் செய்யவில்லை. தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு செல்வேன். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறேன்.
திங்கள் கிழமை பிரதமர் மோடியை இது தொடர்பாக சந்திக்கிறேன். இந்த பிரச்சனை குறித்து அவரிடம் எடுத்து கூறுவேன். போலீசின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை, என்று பாத்திமாவின் தந்தை அப்துல் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications