'நான் எனது தேசத்தை நேசிக்கிறேன், அரசை இல்லை!' சுதந்திர தினத்தன்று ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம் ட்வீட்
சென்னை: 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ஒட்டுமொத்த தேசமும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது.
நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் இன்று நினைவு கூரப்பட்டது. அதேபோல இந்த 76ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

டெல்லி செங்கோட்டை
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார். 9ஆவது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார். செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டை அரிக்கும் கரையானாக ஊழல் தான் உள்ளது. இந்த ஊழலை ஒழிக்கவில்லை என்றால் நம்மால் முழு வேகத்தோடு முன்னேற முடியாது.

பிரதமர் மோடி
ஊழல் நமக்கு ஒரு பெரிய சவால் என்றால் நெபோடிசம் நமக்கு மற்றொரு பெரிய சவால் வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை, முன்னுரிமை அளிப்பதே நெபோடிசம் ஆகும். சிபாரிசுகள் தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தீங்கு. இது திறமைசாலிகளின் வாய்ப்பை பறிக்கும். மேலும், ஊழலுக்கும் வழிவகுக்கும். குடும்ப நலனுக்கும் தேச நலனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தகுதியும் திறமையும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தர வேண்டும். அப்போது தான் நமது தேசம் வளர்ச்சி அடையும்" என்று கூறி இருந்தார்.

பி.சி.ஸ்ரீராம்
இதற்கிடையே முன்னதாக பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கேற்ப பலரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். அதேபோல சுதந்திர தினத்தையொட்டி இன்று பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

நாட்டை நேசிக்கிறேன்
பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எனது தேசத்தை நேசிக்கிறேன். ஆனால் அரசை அல்ல. ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. சுதந்திர தினத்தன்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படியொரு கருத்தைக் கூறியுள்ளது பெரிய விவாதத்தையே இணையத்தில் கிளப்பி உள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications