நான் ரெடிதான்.. டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணிக்கு தயார்.. கருணாஸ் பல்டி!
லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணி வைக்க தயார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணி வைக்க தயார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தேமுதிக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை போலவே முக்குலத்தோர் புலிப்படை, தலைவர் கருணாஸ் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது பெரிய சஸ்பென்சாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கருணாஸ் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக ஆட்சிக்கு 5 வருடம் முழுதாக ஆதரவு அளிப்பேன். நான் போட்டியிட்டது இரட்டை இலை சின்னத்தில்தான். அதனால் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் கூறினார்.

என்ன பேட்டி
இந்த நிலையில் திடீரென்று பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் இருந்து பாஜகவை கருணாஸ் விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கருணாஸ் பேட்டியளித்த இருக்கிறார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரை விமர்சனம் செய்கிறார்கள்.

கூட்டணி என்ன
கூட்டணி குறித்து விவாதிக்க அழைத்தால் டிடிவி தினகரனை கண்டிப்பாக சந்திக்க தயார்.மக்களவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பிப்ரவரி 27ல் முடிவு எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

பாமக கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை தற்போதைய தேர்தலில் டிடிவி தினகரன் பிரிப்பார். அவருக்கு நிறைய வாக்கு வங்கி இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநரிடம் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போது ஏன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

ஏன் செய்தீர்கள்
தற்போது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என் தெரியவில்லை. இதை அவர்தான் விளக்க வேண்டும். கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என பாஜக பெரிதாக பேசி வந்தது. ஆனால் கடைசியில் அதே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறது. தைரியம் இருந்தால் தனித்து போட்டியிட வேண்டியது தானே என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications