செல்லூர் ராஜூ பேச்சை விடுங்க.. அண்ணாமலை பேசுறத பார்த்தீங்களா.. ஒரு முடிவோடு தானா?

Subscribe to Oneindia Tamil

களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோவையில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டணிக்காக எங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா பெயரில் கட்சியை வைத்து உள்ள நாங்கள் எப்படி அண்ணாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வோம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். அண்ணா குறித்த வரலாற்றை திரித்து பொதுவெளியில் பேசுவது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை நாம் அறிவித்துவிட்டோம் இனி பாஜக மாநில தலைவர் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்திருந்தனர்.

i will speak at the right time: Annamalai said today that while talking about the BJP-AIADMK alliance

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, எங்கள் கொள்ளை அண்ணாயிசம், எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பிரச்சனை இல்லை. அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதிக்கிறார்கள். நாங்கள் அண்ணாமலையை மட்டுமே விமர்சிக்கிறோம்" என்றார்.

செல்லூர் ராஜூவின் இந்த பேச்சின் மூலம் அதிமுக பாஜக கூட்டணியை விட்டு செல்லாது என்பது தெரிவதாகவும், அதேநேரம் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது தெரிவதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே இன்று செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அதிமுகவுடன் கூட்டணி முறிவா என்ற கேள்வி கேட்டனர்.அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்கள் டிவி சேனல் நடத்துறதுக்கு பேட்டி கொடுக்க முடியாது.. பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+