"ரிஸ்க்".. ஜெயலலிதா விஷயத்துல..அவரை ஏன் இழுக்குறீங்க? ராதாகிருஷ்ணனுக்காக வரிந்து கட்டி வந்த அண்ணாமலை
சென்னை: ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கையில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது.
மேலும் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அண்ணாமலை
இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்து உள்ளார். அண்ணாமலை அளித்த பேட்டியில், இந்த அறிக்கையில் 2 - 3 விஷயங்களை உன்னிப்பாக பார்க்க வேண்டும். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் என்ன சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்லலாம். ஆனால் இந்தியாவிலும் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். சிறப்பான மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு போய் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

அதிகாரிகள்
அரசு அதிகாரிகள் சொல்லும் வார்த்தைகளை கூட ட்விஸ்ட் செய்து பார்ப்பது தவறு. அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் ஒவ்வொரு முடிவையும் விமர்சனம் செய்ய முடியாது. இக்கட்டான நேரத்தில், தலைபோகிற நேரத்தில் அரசு அதிகாரிங்கள் ரிஸ்க் எடுத்துதான் வேலை செய்ய முடியும். கடினமான முடிவுகளைத்தான் எடுக்க முடியும். ஆனால் அரசியல் பார்வையில் இதை பார்க்க கூடாது.

ட்விஸ்ட்
இதை எல்லாம் அரசியலாக்கினால் அதிகாரிகள் வேலை செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே எய்ம்ஸ் குழு திருப்தி இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்த அறிக்கையில் அதை மறுக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஆதாரம் எதுவும் இல்லை. பொத்தாம் பொதுவாக அவர்கள் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரிகளை இதில் இழுக்காதீர்கள்.

ஐஏஎஸ்
ஐஏஎஸ் அதிகாரிகளை இதில் உள்ளே இழுப்பது சரியான விஷயம் அல்ல. அவர்களை அரசியலில் உட்படுத்தாதீர்கள். நம்ம சண்டையில் அவர்களை உள்ளே கொண்டு வராதீர்கள். அந்த வேலைக்கு உள்ளே நாம் செல்ல வேண்டாம். இந்த அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் எதுவும் அறிவியல்பூர்வமாக இல்லை.எய்ம்ஸ் சிகிச்சை முறை சரிதான் என்று சொல்லும் போது, எப்போது அதை ஆறுமுகசாமி நிராகரிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது, என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications