கொலுவின் போது எப்படி இருந்தார் தெரியுமா? கடைசி காலத்தில் வலியால் துடித்த பவதாரணி.. விலாசினி கண்ணீர்
சென்னை: பாடகி பவதாரணி கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கடந்த ஒன்றரை மாதங்களாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவருடைய மாமா மகள் விலாசினி தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று மாலை இலங்கையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 47. யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு பவதாரணியின் தாய் மாமா மகள் விலாசினி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு மாதத்திற்கு முன்பு தான் பவதாரணி அக்காவுக்கு புற்றுநோய் இருப்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலும் அவர் 4 ஆவது நிலையில் இருக்கிறார் என்பதும் தெரியும். கடந்த மாதம் dehydration ஆகி மருத்துவமனையில் அனுமதித்ததாக சொன்னார்கள்.
நான் பவா அக்காவின் கணவருக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் உடனே அழ தொடங்கினார். என்னாச்சு மாமா ஏன் அழறீங்க என கேட்டதற்கு, உன் அக்காவை கடைசியாக வந்து பார்த்துவிட்டு செல் என்றார். என்னாச்சு என கேட்ட போதுதான் அவருக்கு 4ஆவது நிலை புற்றுநோய் இருக்கிறது என்றார்.
மேலும் பவாவிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். அவரை பார்க்கும் போது அழுகையை அடக்கிக் கொள் என்றார். எங்கள் உறவினர் ஒருவர் மருத்துவராக உள்ளார். அவரிடம் பவாவின் மருத்துவ அறிக்கைகளை வாங்கி கொண்டு போய் காண்பித்தோம். அவரும் 4ஆவது ஸ்டேஜில் இருப்பதால் அப்படியே விட்டுவிடுங்கள் என்றார்.
இதற்கு முன்பு கொலுவின் போது பவா அக்காவை பார்த்துவிட்டு நானும் என் அம்மாவும் பயந்துவிட்டோம். நாங்கள் கேட்டதற்கு டயட்டில் இருப்பதாக தெரிவித்தார். அந்த கொலுவில்தான் நான் கடைசியாக அவருடன் சேர்ந்து ராஜா சார் பாடிய பாடலை பாடினேன். ஜனவரி 18 ஆம் தேதி நான் அமெரிக்காவுக்கு சென்றேன். பவதா அக்கா அதற்கு முன்பே இலங்கைக்கு கிளம்பிவிட்டார்.

2020 ஆம் ஆண்டே பவதாவுக்கு பித்தப்பையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பித்தப்பையில் கல் இருப்பதாக சொல்லப்பட்டதா, இல்லை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்களா என தெரியவில்லை. என் அப்பாவை பார்த்ததும் அழுதார். கடந்த ஒன்றரை மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.
கடைசியில் உடம்பில் நீரே இல்லை என்றுதான் அனுமதித்தார்கள். அப்போதுதான் அவருக்கு 4ஆவது ஸ்டேஜ் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு விலாசினி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications