டிசம்பர் முதல்.. செல்போனில் OTP லேட்டாக வரும்.. ரெடியாக இருங்கள்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பை பயன்படுத்தும் பொதுகம்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

டிசம்பர் 1 முதல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வணிக செய்திகள் மற்றும் OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) செய்திகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் ஃபிஷிங் மோசடிகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படாலம்.

india

ஆம்.. டிசம்பர் 1 முதல் அனைத்து OTP களும் கண்காணிக்கப்படும். இதனால் OTP பெறுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். போலி OTP களை பயன்படுத்தி மோசடி செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை உதவும்.

ஒவ்வொரு மெசேஜும் எங்கேயிருந்து வருகிறது என்ற மூலத்தையும் கண்காணிப்பதன் மூலம் பயனர்களின் பாதுகாப்பு அதிகரிக்கும்.

மேலும், ஜனவரி 1 முதல் 5G உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான செலவுகள் தரநிலைப்படுத்தப்படும். இதனால் 5G சேவைகள் விரைவில் கிடைக்கும்.

TRAI-யின் இந்த புதிய நடவடிக்கைகள் தொலைத்தொடர்பு துறையை பாதுகாப்பானதாகவும், நவீனமாகவும் மாற்றும். பயனர்கள் இனி மோசடிகளுக்கு அஞ்சாமல் தொலைபேசிகளை பயன்படுத்தலாம். மேலும் 5G சேவைகளும் விரைவில் கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்:

* டிசம்பர் 1 முதல் OTP களில் கண்காணிப்பு கட்டாயம்.
* 5G உள்கட்டமைப்பு விரைவில் உருவாகும்.
* தொலைத்தொடர்பு துறை பாதுகாப்பானதாக மாறும்.

ஆரம்பத்தில் அக்டோபர் 1க்கு இந்த விதிமுறைகளை அமல்படுத்தும் காலக்கெடு, நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த வழிமுறைகளை பின்பற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நவம்பர் 1 க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, அது டிசம்பர் 1 க்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+