ஐ.டி ரெய்டில் சிக்கிய ரூ.2.85 கோடி.. அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் பறிமுதல்.. பரபர!
சென்னை: சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 2.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் உள்ள பி.எல்.ஆர் புளு மெட்டல்ஸ் ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடத்திய இந்த ரெடிமிக்ஸ் நிறுவனம், பல்லாவரம் லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது. இவர் அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நகை அடகு கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தீராம்பட்டியை சேர்ந்த அருள்பிரகாசம், மணப்பாறை மலையாண்டி தெருவில் அடகு கடை வைத்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அருள்பிரகாசம் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலின்படி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications