ஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிளையை பரப்பியுள்ள நாமக்கல்லை சேர்ந்த ஒரு நீட் பயிற்சி மையத்தின் கிளைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல், பெருந்துரை, சென்னை உள்ளிட்ட இடங்களில், அந்த பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, முதற்கட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத 150 கோடி வருவாயை கண்டுபிடித்துள்ளது.

Income tax raids in NEET coaching Center in Tamilnadu

இதில் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 கோடியை பறிமுதல் செய்துள்ளனர் வருமான வரித்துறையினர். மேலும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஏகப்பட்ட ஆவணங்களும் இங்கு பதுக்கி வைக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாமக்கலைச் சேர்ந்த இந்த தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+