அகால மரணங்கள்... சூரிய கிரகண பாதிப்பு... அண்டை நாடுகளின் வம்புச்சண்டை - பஞ்சாங்கம் கணிப்பு
அண்டை நாடான சீனா, பாகிஸ்தான், போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வர நேரும் என பஞ்சாங்கம் எச்சரித்தது போலவே எல்லைப்பகுதியில் தாக்குதலைத் தொடங்கி பதிலடி வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது.
சென்னை: மழை, புயல், வெள்ளம் பற்றி கணித்த பஞ்சாங்கம் இந்தியா சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் ஏற்படும் என்றும் அண்டை நாடுகள் வம்புச்சண்டைக்கு வரும் என்றும் கணித்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே எல்லைப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ராணுவ வீரர்கள் உயிர்பலியாகும் அளவிற்கு சண்டை நடந்துள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
Recommended Video
இந்திய படைகள்தான் எல்லைதாண்டி வந்து சீன படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது இந்த தகவலை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் சாலை பணிகளை மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லடாக் எல்லையில் கடந்த மே மாதம் பாங்கோ லேக் பகுதியில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இந்த நிலையில் உயிர்பலிகள் ஏற்படும் அளவிற்கு மோதல் நிகழ்ந்துள்ளது எல்லைப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளளது.
இந்த போர் பதற்றம் எல்லைகளில் நடைபெறும் சண்டை பற்றி வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்கம் ஏற்கனவே கணித்திருந்தது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வரும். உலக நாடுகளில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் முயற்சி தோல்வியில் முடியும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் பதற்றம் மட்டுமல்லாது நிகழப்போகும் சூரிய கிரகணம் பற்றியும் அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றியும் பஞ்சாங்கம் கணித்திருக்கிறது. சூரிய கிரகணத்தால் சூறாவளி காற்று பயம், ஆலங்கட்டி மழை, புழுதிக்காற்றால் கடும் பாதிப்பு ஏற்படும். இயற்கை சீற்றம் பாதிப்பு ஏற்படும் தானியங்களின் விலை உயரும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications