Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியை பின்லேடனுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதா? பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீவிரவாத நாடு என முத்திரை குத்தப்பட்டு விட்டதாலும், பழைய காலத்தை போல தீவிரவாத தாக்குதல்களை நடத்த முடியாத விரக்தியிலும் பாகிஸ்தான் இவ்வாறு பேசி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், தீவிரவாதத்தால் பாகிஸ்தான் திவாலானதை போல, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோவின் தலையும் திவாலாகிவிட்டதாக இந்தியா விமர்சி்ததுள்ளது.

 முற்றும் இந்தியா - பாக். மோதல்

முற்றும் இந்தியா - பாக். மோதல்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்தியாவுக்கு தலைமை பதவி கிடைத்ததை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்தக் கூட்டம் தொடங்கிய நாள் முதலே, இந்தியாவை பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்து வருகிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் அந்நாடு குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியாவும் கடுமையாக பதிலடி கொடுத்தது. "பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாம் ஐநா சபையில் பேசவே கூடாது" என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக பதிலளித்தார். மேலும், தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் விளங்குவதாகவும் அவர் கூறினார்.

 மோடியை பின்லேடனுடன் ஒப்பிட்ட பாக்.,

மோடியை பின்லேடனுடன் ஒப்பிட்ட பாக்.,

இந்தியாவின் இந்த பதிலடி பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது நேற்று தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், "ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான்" என இந்தியா கூறியது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமர்" என பிலாவால் பூட்டோ கூறினார்.

"விரக்தியில் பாகிஸ்தான்"

இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த விமர்சனம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானின் இந்த விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்தது. தன் மீது தீவிரவாத நாடு என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டதாலும், பழைய காலங்களை போல தீவிரவாதத்தை பயன்படுத்த முடியவில்லையே என்ற விரக்தியிலும் பாகிஸ்தான் உள்ளது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே பாகிஸ்தானின் இந்த விமர்சனத்தை கருத வேண்டியுள்ளது. மும்பை, நியூயார்க், புல்வாமா, பதான்கோட், லண்டன் போன்ற நகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு உலகம் முழுக்க தீவிரவாத தடங்களை பதித்த பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்றுதான் சொல்ல முடியும். அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

"மூளையும் திவாலாகி விட்டது"

உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை பாகிஸ்தானுக்கு இருக்கிறது. அந்த நாட்டில் தான் ஐநாவால் தடைவிதிக்கப்பட்ட 126 தீவிரவாதிகளும், 26 தீவிரவாத இயக்கங்களும் உள்ளன. தீவிரவாதத்தை பயன்படுத்தி திவாலானதுதான் பாகிஸ்தானுக்கு மிச்சம். திவாலான நாட்டின் அமைச்சராக இருக்கும் பிலாவால் பூட்டோவுக்கு தற்போது மூளையும் திவாலாகிவிட்டது. அதனால்தான் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை அவர் பேசி வருகிறார். அது சரி.. தீவிரவாத எண்ணம் கொண்டவர்களிடம் தரம் தாழ்த்த பேச்சுகளை தவிர வேறு எதை நம்மால் எதிர்பார்க்க முடியும்? என இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+