Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த இந்தியா.. தோளோடு தோள் கொடுக்கும் ரஷ்யா! நமக்கு மட்டும் இவ்வளவு லாபமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை அதிக அளவு இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்தி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக் காரணம் என்ன? அதனால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு? என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

உக்ரைன் போருக்குப் பிறகு உலக சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு பல்வேறு நாடுகளில் இருந்து பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யாவுடன் வாணிகம் செய்யும் நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கத் தொடங்கியது.

அப்போதும், இந்தியா தனது தேவைக்காக அதிக அளவில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது. காரணம், ரஷ்யா வழங்கும் எண்ணெய், உலக சந்தை விலையை விடக் குறைவாக இருந்தது. இதனால் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரிவிதிப்பை அறிவித்தார்.

India Faces 50 US Tariff

ரஷ்ய எண்ணெய்

இந்தியாவின் மிகப்பெரிய சுமையாக இருப்பது எரிபொருள் இறக்குமதி தான். தினசரி தேவையை நிறைவேற்ற, இந்தியா தனது எண்ணெய் தேவையின் 80% க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதிலே, ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்ததால், அரசுக்கும், இந்திய நுகர்வோருக்கும் சிறிய அளவிலாவது நிவாரணம் கிடைத்தது. CLSA எனும் சர்வதேச ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பு கிடைத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய்

மேலும், ஜாம்நகர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில், இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது குறைந்த செலவில் அதிக உற்பத்தி கிடைத்தது. இதன் மூலம் இந்தியா வெளிநாடுகளுக்கு டீசல், பெட்ரோல் போன்ற தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில், உள்ளூர் சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உதவியது.

எரிசக்தி பாதுகாப்பு

இந்தியா பாரம்பரியமாக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளுடன் சமநிலை பேணும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தியா தனது "எனர்ஜி பாதுகாப்பை" உறுதி செய்தது. அதே நேரத்தில், ரஷ்யாவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்தியது. இதனால், உலகளவில் "இருதரப்பு உறவை சமப்படுத்தும் நாடு" என்ற மதிப்பை இந்தியா பெறுகிறது. ஆனால், இந்த நிலைமை அமெரிக்காவுக்கு சிரமம் அளித்துள்ளது.

அமெரிக்கா வரி

ஏனெனில், இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், மாஸ்கோவுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. அதனால், அமெரிக்கா இந்தியாவை அழுத்தி வருகிறது. சமீபத்தில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் சில தயாரிப்புகளுக்கு 50% வரை சுங்கவரி விதித்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழுத்தி, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 100% வரி விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

உலக பொருளாதாரம்

மொத்தத்தில் பார்த்தால், ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பயனளித்துள்ளது. அரசியல் ரீதியாகவும் "சுயநிலை" (strategic autonomy) கொள்கையை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் புதிய வரிகள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள், இந்த நன்மையை ஒரு கட்டத்தில் குறைக்கக் கூடும். இந்தியா, தனது நலனைக் காக்க, ஒருபுறம் ரஷ்யாவுடனும் மறுபுறம் அமெரிக்காவுடனான உறவுகளை சமநிலையாக பேணும் உத்தியைத் தொடர வேண்டியிருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+