இந்தியாவில் 30ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு.. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82,817 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது . நேற்று முன்தினம் 44,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 34,113 பாதிக்கப்பட்டனர்.

இன்று தொற்று எண்ணிக்கை 30ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82,817 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,17,60,458 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த 24மணிநேரத்தில் 347 பேர் கொரோனாவால் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் 5,09,358 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,23,127 ஆக குறைந்துள்ளது. . தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2.23 சதவிகிதம் ஆக உள்ள நிலையில் இதுவரை 173.42 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications