சென்னையில் கடைசி நேரத்தில் ரத்தான இண்டிகோவின் 22 விமான சேவை.. போராட்டத்தில் இறங்கிய 154 பயணிகள்!
சென்னை: சென்னையில் கடைசி நேரத்தில் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், 154 பயணிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இண்டிகோ விமான ஊழியர்களின் போராட்டம் காரணமாக 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயணிகளுடன், விமான நிலைய ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தினமும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சில விமானங்கள் 10 மணி நேரம் வரை தாமதமாகியது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே கடந்த இரு நாட்களாக இண்டிகோ விமான நிலைய நெட்வொர்க் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் இண்டிகோ ரத்து செய்த 1,232 விமானங்களில் மட்டும் கிட்டத்தட்ட 62% விமான ஊழியர் பற்றாக்குறையே காரணமாக அமைந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திலும் இண்டிகோ விமான சேவை பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நேரம் தொடர்பான விதிகள் கடுமையாக இருப்பதாக கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைசி நிமிடத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் கடைசி நிமிடத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியதால், பயணிகள் கொந்தளித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலேயே பாதிக்கப்பட்ட 154 பயணிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு தண்ணீர் கொடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சென்னை மட்டுமல்லாமல் திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications