இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சல்.. கொரோனோ போல வேகமாக பரவும்..3 நாட்கள் ரெஸ்ட் கட்டாயம்
இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்கள் வீடுகளுக்குள் தங்கி கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காய்ச்சல் பாதித்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புன்னகை திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல்கட்டமாக 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். எச்3என்2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் என்பதால் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் நாளை சென்னையில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்புளூயன்சா எச்3என்2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். காய்ச்சல் பாதித்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
கொரோனா என்ற கொடிய வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை மக்களை முடக்கிப்போட்டது. கொரோனா அரக்கனின் பிடியில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புது புது வைரஸ் காய்ச்சல்கள் வந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications