Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 பேரா? அதிகாலை 5 மணிக்கே பறந்த அதிகாரிகள்.. நடராஜனுக்கு கொரோனா வந்தது எப்படி? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாக உள்ளன.

2021 ஐபிஎல் தொடருக்கு மீண்டும் கொரோனா காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் பாதியில் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது.

அதன்பின் கொல்கத்தா அணியிலும் சில வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இதை தொடர்ந்து மொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் வரிசையாக பல வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதால் மொத்தமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

பாதியில் நிறுத்தப்பட்டது

பாதியில் நிறுத்தப்பட்டது

பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பிசிசிஐ அமைப்பிற்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் தொடரை மேலும் நடத்த முடியாது என்று பிசிசிஐ உணர்ந்து கொண்டது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஐபிஎல் தொடர்கள் மாற்றப்பட்டது.

இரண்டு போட்டிகள்

இரண்டு போட்டிகள்

அமீரகத்தில் மிகுந்த பாதுகாப்பான ஏற்பாடுகளோடு போட்டிகள் நடந்து வருகின்றன. ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதல் மூன்று போட்டியும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஹைதராபாத் டெல்லி அணிகளுக்கு இடையில் போட்டி நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளியே எங்கேயும் செல்லவில்லை. உள்ளே ஹோட்டல் நிர்வாகிகள் அல்லது பயிற்சியின் போது இருந்து வேறு சப்போர்ட் ஸ்டாப் மூலம் இவருக்கு கொரோனா வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோட்டலுக்குள் இவர் சக வீரர் ஒருவருக்கு பிறந்த நாள் மட்டுமே கொண்டாடி உள்ளார். பயோ பபுள் விதிகள் எதையும் இவர் மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 பேர்

6 பேர்

இவருக்கு நேற்று இரவே டெஸ்ட் எடுக்கப்பட்டுவிட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு ரிசல்ட் வந்துள்ளது. பாசிட்டிவ் என்பதால் உடனடியாக இவர் நெருக்கமாக இருந்த 6 பேருக்கு டெஸ்ட் எடுக்க வேண்டும். இன்றுதான் மேட்ச் என்பதால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அதிகாலை 5 மணிக்கு நடராஜனை தனிமைப்படுத்தி உள்ளனர். 5 மணிக்கு அதிகாரிகள் எல்லோரும் விரைந்து உள்ளனர்.

டெஸ்ட்

டெஸ்ட்

அதிகாலை 5 மணிக்கு பின் வரும் வீரர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

1. விஜய் சங்கர்- வீரர்

2. விஜய் குமார் - மேனேஜர்

3. ஷியாம் சுந்தர் - பிசியோ

4. அஞ்சனா வண்ணன் - மருத்துவர்

5. தூஷகர் கெதர்- மேனேஜர்

6. பெரியசாமி கணேசன்- நெட் பவுலர்

நெகட்டிவ்

நெகட்டிவ்

6 பேருடன் தொடர்பு என்பதால் பதறிப்போய் அதிகாலையில் டெஸ்ட் செய்துள்ளனர். இந்த 6 பேருக்கும் நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+