இந்த டிசைன்ல "சேர்" வாங்கியிருக்கீங்களா.. அப்போ ரொம்ப உஷாரா இருக்கனும்ங்க.. இந்த "சம்பவத்தை" பாருங்க
சென்னை: குறிப்பிட்ட மாடல்களில் நாற்காலிகளை வாங்கி அதை வெட்டவெளியில் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள் மக்களே!
ஆபத்து எந்த வடிவத்தில் வரும் என முன்கூட்டியே கணிப்பது கடினம். ஆனால் நாம் உஷாராக இருந்தால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதுதான் முக்கியமானதாகும். வீடுகளில் சுற்றி புதர் போல் செடிகள் வளர்ந்திருக்கும். அதை நம்மால் வெட்ட முடியாவிட்டாலும் காசு கொடுத்து ஆள் வைத்து வெட்டுவதற்கும் மனமில்லை.

புதர்களுக்குள் பாம்பு
இதனால் அந்த புதர்களுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் இருக்கும். இதை அறியாமல் நாம் அந்த பக்கம் சென்றால் அது தற்காத்துக் கொள்ள நினைத்து நம்மை கடித்துவிடும். அது போல் வீடுகளை தண்ணீர் விட்டு கழுவி தள்ளும் போது அந்த தண்ணீர் வெளியேறுவதற்காக வீட்டின் ஒரு முனையில் ஓட்டை இருக்கும்.

ஓட்டை
அந்த ஓட்டையை பயன்படுத்தும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதில் துணி வைத்து அடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேள், பூரான், பாம்பு உள்ளிட்ட ஜந்துகள் உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை மொசைக், டைல்ஸ் தரையாக இருந்தால் அந்த ஓட்டை இருந்தாலும் சிமென்ட் போட்டு அடைத்துவிடுவது நல்லது.

ஆபத்து
இது போன்று ஆபத்துகளை நாமாக தேடி செல்வதைவிட அதுவாகவே நம்மை தேடி வரும். இதுகுறித்து டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அதிகாரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நாற்காலியின் இரு பக்கங்களிலும் மூடப்பட்ட ஓட்டைகள் உள்ளன. அந்த ஓட்டையில் ஒரு பகுதியில் டார்ச் அடித்து பார்க்கும் போது ஒரு பாம்பு இருந்தது.

நாற்காலி
அனேமகமாக இந்த நாற்காலியை அதன் உரிமையாளர்கள் வெட்டவெளியிலோ அல்லது தோட்டத்திலோ போட்டு உட்கார்ந்திருக்கக் கூடும். அப்போது அந்த பாம்பு அந்த ஓட்டையில் நுழைந்திருக்கும். எனவே இது போன்ற மாடலான சேர் வாங்கியவர்கள் வீட்டுக்கு வெளியே பயன்படுத்தும் போது சற்று கூடுதல் கவனம் தேவை என அந்த ஐபிஎஸ் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications