"கலங்கிய காயத்ரி".. கோடநாட்டையா இழுக்குறீங்க.. ஓ பி ரவீந்திரநாத் "மேட்டரை" கையில் எடுக்கும் எடப்பாடி
சென்னை: ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி என்று பெண் வைத்து இருக்கும் புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளார். நேற்று முதல்நாள் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக டிடிவி தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய டிடிவி தினகரன், கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது.

விரைவில் உண்மையான குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்த வேண்டும். சட்டம் முன் நிறுத்த வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், என்று அழுத்தம் கொடுத்தனர். இதனால் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பிளான்: இந்த நிலையில்தான் எடப்பாடி தற்போது ஓ பி ரவீந்திரநாத் விவகாரத்தை விரைவில் கையில் எடுப்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்க கோடநாட்டை கையில் எடுத்தால்.. நாங்கள் ஓபிஆர் மேட்டரை கையில் எடுப்போம் என்று ஓபிஎஸ்ஸுக்கு சொல்லாமல் சொல்ல எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். காடூர் பகுதியை சேர்ந்த காயத்ரி தேவி, ஓபி ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இப்போது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
தொடக்கத்தில் நட்பாக பழகியவர், அதன்பின் பாலியல் ரீதியாக அணுக தொடங்கினார், என்னிடம் கேவலமாக பேசினார், என்னை மோசமாக வர்ணிக்க தொடங்கினார், வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தார், உடலுறவு கொள்ள வேண்டும் என்று என்னை அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தார், நான் இதற்கு நோ சொன்னதால் என்னையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என்று கூறினார், என்று அந்த பெண் புகார் வைத்துள்ளார்.
கையில் எடுக்கும் எடப்பாடி: இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்று பேட்டி அளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.ரவீந்திரநாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிஎஸ் மகன்னு பார்க்காதீங்க.. ரவீந்திரநாத் மீதான பாலியல் புகாரில் ஆக்ஷன் எடுக்கணும்.
இதில் பாரபட்சம் பார்க்காமல் ஓ பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஜெயக்குமார் கூறி உள்ளார். இதற்கு காரணம் கோடநாடு விவகாரம் என்று கூறப்படுகிறது. கோடநாடு விவகாரத்தை ஓபிஎஸ்ன் கையில் எடுக்கும் போதெல்லாம் இந்த பெண் விவகாரத்தை ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு கையில் எடுக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கியமாக ஓ பி ரவீந்திரநாத் விவகாரத்தில் காயத்ரி தேவிக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications