"அச்சாணி" ஆடுது.. பின்னப்படும் திமுக வலை.. கஸ்டடிக்குள் போன செந்தில் பாலாஜி.. ஸ்டாலின் திடீர் முடிவு?
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், திமுக கூடாரமோ பெருத்த பரபரப்புக்கு ஆளாகி உள்ளது. இது தொடர்பாக சில பிரத்யேக தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளன.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை சரியென்றும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்தும் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.. அத்துடன், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளது கோர்ட்..

விசாரணைகள்: செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில், இன்று 2-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, செந்தில்பாலாஜி மீதான குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
அவகாசங்கள்: எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை டிஜிபி மற்றும் உள்துறை செயலரே, இந்த விஷயத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும், 6 மாதம் அவகாசம் வழங்க முடியாது, குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்... செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறுதி விசாரணையை நிறைவு செய்ய கால அவகாசம் கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சட்டரீதியான விவகாரங்கள் இப்படி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக கூடாரமோ படுடென்ஷனாக காணப்படுகிறது.. செந்தில்பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததுமே, திமுகவில் ஒருவித பரபரப்பு நிலவ துவங்கிவிட்டது.. தீர்ப்பினை கேள்விப்பட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்களாம்.
முன்கூட்டியே க்ளாஸ்: அதேசமயம், அமலாக்கத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், கஸ்டடிக்கு செந்தில் பாலாஜி செல்லக்கூடும் என்பதையும் முன்கூட்டியே யோசித்தே வைத்திருந்தனர். அதனால்தான், இந்த மோசடி வழக்கு தொடர்பாகவும், ரெய்டில் சிக்கியவைகளை வைத்தும் எந்தெந்த மாதிரியெல்லாம் அமலாக்கத்துறையினர் கேள்வி கேட்பார்கள் என்பதையும், அதற்கு எப்படிப்பட்ட பதில்களை சொல்ல வேண்டும் என்பதையும் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே திமுக வழக்கறிஞர்கள் க்ளாஸ் எடுத்துவிட்டனராம்.
எனவே, அமலாக்கத்துறையினரின் கேள்விகளை, அநாயசமாக செந்தில்பாலாஜி எதிர்கொள்வார் என்ற தகவல் திமுக வட்டாரங்களில் பரவி வருகிறது. இது ஒருபுறமிருக்க, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கஸ்டடி என நடந்திருப்பதால் இலாகா இல்லாத அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் தமிழக அரசியலில் எதிரொலிக்கிறது.
ஸ்பெஷல் செய்தி: சில நாட்களுக்கு முன்பு நம்முடைய "ஒன் இந்தியா"வில், இதுகுறித்து நாம் பிரத்யேகமாக செய்தி வெளியிட்டிருந்தோம்.. அதாவது, ஆளுநர் இந்த விவகாரத்தை அன்று கிளப்பியபோதே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா? என்று திமுக மேலிடம் யோசித்ததாம்.. இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் அப்போது விவாதித்திருக்கிறார்.
குறிப்பாக, செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம்கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்து விட்டால், அப்போது செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது பெரிதும் விமர்சிக்கப்படும் என்றும், அது தன்னுடைய நேர்மையான அரசு நிர்வாகத்தையும் அரசியலையும் கேள்விக்குறியாக்கினால், தன்னுடைய இமேஜ் சரியும் தானே என்றெல்லாம் விரிவாகவே விவாதித்தாராம் ஸ்டாலின்.
முக்கிய முடிவு: ஆனால், செந்தில்பாலாஜியை பொறுத்தவரை, முதல்வரின் சங்கடத்தை, கைது நடவடிக்கையின்போதே நன்கு உணர்ந்திருந்தாராம்.. சிகிச்சைகள் முடிந்து, செந்தில் பாலாஜியை புழலுக்கு கொண்டுசெல்லப்பட்ட தினத்தன்று, இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடமும் பேசியிருந்தாராம் செந்தில் பாலாஜி.
"என்னை மையப்படுத்தி தலைவருக்கு (ஸ்டாலின்) ஏற்படும் சங்கடங்கள் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.. ஏற்கனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருக்கிறேன். அதை தலைவர் ஏற்க வேண்டும்.. தேவைப்பட்டால் கடிதம் கூட எழுதுகிறேன்" என்று சிறைத்துறை அதிகாரிகள் மூலம் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியிருந்தாராம் செந்தில் பாலாஜி..
தர்மசங்கடம்: அந்தவகையில், ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை தருவதற்கு முன்னேயே, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜி தன்னை தானே விடுவித்து கொள்வார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.. தற்சமயம், உச்சக்கட்ட விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதால், இதுகுறித்த ஒரு முடிவு விரைவில் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications