Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 வருடத்திற்கு முன்பே பதிவுத்திருமணம் செய்த நயன்தாரா - விக்னேஷ்? வாடகைத்தாய் விசாரணையில் பரபர தகவல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

 Is Nayanthara and Vignesh Shivan reportedly married 6 years old? What they told to investigators?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இது சட்டப்படி விதிமீறல் என்று புகார்கள் வைக்கப்பட்டன.

இவர்கள் எந்த முறைப்படி குழந்தை பெற்றுக்கொண்டனர் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா, விசாரணை நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிப்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து என்ன செய்ய வேண்டும் முடிவெடுப்பார்கள், என்று விளக்கம் அளித்தார்.

இந்தியாவில் வாடகைத்தாய் தடை சட்டம் உள்ளது. ஆனால் இதில் சில விதி விலக்குகள் உள்ளன.

மொத்தம் இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார்.

Is Nayanthara and Vignesh Shivan reportedly married 6 years old? What they told to investigators?

இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதற்கு இந்தியாவில் முழுமையாக தடை இல்லை. இப்படித்தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இவர்கள் விதிப்படிதான் குழந்தைகளை பெற்றுக்கொண்டனரா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 3 பேர் கொண்ட குழு இதற்காக நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கியமான சில ஆவணங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் சமர்பித்ததாக கூறப்படுகிறது.

அதன்படி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆவணங்களை அவர்கள் விசாரணையில் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

6 வருடங்களுக்கு முன்பே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதற்கான சான்றுகள் உள்ளன. இதனால் புதிய வாடகை தாய் சட்டம் பொருந்தாது. அப்படியே பழைய வாடகைத் தாய் சட்டமாக இருந்தாலும் 6 வருடங்களுக்கு முன் திருமணம் செய்ததால் நாங்கள் விதிகளை மீறவில்லை என்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பு ஆவணங்களை சமர்ப்பணம் செய்ததாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+