லோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா!
தமிழகத்தில் திமுக ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா என தெரியவில்லை.
சென்னை: எம்பி தேர்தல் முன்னணி நிலவரம் எல்லாம் சரி, ஆனால் இடைத்தேர்தலில் திமுக ஒன்னும் அபார வெற்றியை எட்டவில்லையே? ஏன்? இது எப்படி ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை குறைந்தது 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை தக்க வைக்கலாம். இருந்தாலும், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரின் முடிவைப் பொறுத்து இந்த நிலைமை மாற வாய்ப்பிருந்தது.
திமுகவை பொறுத்தவரை, முதல் விஷயம், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஆட்சி அமைக்கும். இரண்டாவது விஷயம், இதற்கு குறைவான தொகுதியில் வென்றால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் உதவியை கோரும் நிலை ஏற்படும்.

கட்சி தாவல் தடை சட்டம்
மூன்றாவது விஷயம், ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ பதவியை அவர்கள் இழக்கும் நிலை ஏற்படும். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பது அல்லது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது.. இதில் இரண்டில் ஒன்றை செய்தால்தான் திமுக ஆட்சி அமைக்க உதவி செய்ய முடியும்.

முன்னிலை
இதை வைத்து பார்க்கும்போது, எம்பி தேர்தலை கவனத்தில் கொண்ட திமுக, இடைத்தேர்தலில் கோட்டை விட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

நெருக்கடி தருமா?
அதாவது எம்பி தேர்தலில் எதிர்பார்க்காத வெற்றியை திமுக எட்டி வருகிறது என்றால், இடைத்தேர்தலில் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை என்பதே உண்மை. அதனால் அக்கட்சிக்கு நெருக்கடிதான் ஏற்பட்டுள்ளது. அதனால் அதிமுகவுக்கு மாற்றாக திமுக உருவாகுமா, ஆட்சி கவிழ்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுக்குமா என தெரியவில்லை.

சாத்தியமா?
இப்படி எம்பி தேர்தலில் மட்டுமே வெற்றி முகம் என்பதால், அகில இந்திய அளவில் மட்டுமே திமுக கவனம் செலுத்தியுள்ளது. அதுவும் கூட மத்திய அமைச்சர் பதவியை குறி வைத்து செயல்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள திமுக இன்னும் கள முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என்பதே இப்போது புலப்பட்டுள்ளது. அதனால் ஆட்சி மாற்றம் நடக்குமா? சாத்தியமா என்பது இனி சந்தேகம்தான்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications