தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா இல்லையா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் நாளை செயல்படுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. தீபாவளிக்கு மறுதினம், அதாவது நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக விடுமுறை விடப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுகட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகை என்பது ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும்.

தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் அமாவாசை அன்றும், வடமாநிலங்களில் அதற்கு அடுத்த நாள் வரையிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அதாது தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒரு நாளும், சில மாநிலங்களிலும் இரண்டு நாட்களும், சில மாநிலங்களில் 4 நாட்கள் வரையிலும் கொண்டாப்படும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாப்பட்டது. பொதுவாகவே தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களின் கோரிக்கை அடிப்படையில் விடுமுறைவிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் அக்டோபர் 31ம் தேதிக்கு மறுநாளான நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக அக்டோபர் 31, நவம்பர் 1, நவம்பர் 2, நவம்பர் 3 என நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதையடுத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட பல லட்சம் பேர் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்து ஊருக்கு சென்றனர். தீபாவளி பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் நவம்பர் 4ம் தேதி மீண்டும் சென்னை உள்பட அவரவர் வேலை செய்யும் ஊருக்கு திரும்பினர். மாணவ, மாணவிகளும் பள்ளிகளுக்கு திரும்பினார்கள்.
இதனிடையே அரசு நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போதே, இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படியே சனிக்கிழமையான நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications