கொரோனா பரவல்.. பண்டிகை நாட்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்... ஜெ.ராதாகிருஷ்ணன் சொல்லும் காரணம்..!
சென்னை: பண்டிகை நாட்களில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி, நவராத்ரி உள்ளிட்ட பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் பலரும் ஷாப்பிங் செய்வதற்காக வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பல மாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முன்பைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இது சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் கொரோனா நம்மை என்ன செய்துவிடும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து கொரோனா நோயாளிகளே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகிட வேண்டும் என்பதற்காக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால் அதனை மனதில் வைத்து இந்த அறிவுரையை ஜெ.ராதாகிருஷ்ணன் நல்கியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications