Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாள்.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மலர் தூவி அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

திரைத்துறையில் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அப்போது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே எம்.ஜி.ஆர் மறைந்தார்.

Jayalalitha aiadmk edappadi palaniswami

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது. முதலமைச்சர் பொறுப்பை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஏற்றார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி தலைமையிலான அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜானகி ராமச்சந்திரன் அரசியல் களத்தில் இருந்து விலகினார்.

அதன்பிறகு, ஒன்றிணைந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991, 2001, 2011, 2016 என 4 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம், காவல் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு-மாடுகள் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.

2016 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 2வது முறை வென்று முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து, 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இதே நாளில் (டிசம்பர் 5) மறைந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கலந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினை​விட நுழை​வாயி​லின் உள் பகு​தி​யில் உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெற்றது.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இன்று மரியாதை செலுத்தி உள்ளனர். இதையொட்டி நினைவிடம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+