மார்ச் 5 முதல் 12 வரை.. ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா வரும் பிப்.24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எம்ஜிஆருக்கு பின் அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களுக்கு சொல்லும் வகையில் கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவுக்கு திட்டமிட்ட போதே, ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பற்றியும் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுக தொண்டர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதிமுக அலுவலகம்
அதேபோல் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா நாளன்று அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதன் பின்னர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 நாட்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்க உள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது. அதன் பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் 6 நாட்கள் நடக்க உள்ளது. அப்போது ஜெயலலிதாவின் சாதனைகளையும், அதிமுகவின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட உள்ளது.

கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைந்து இருந்த நிலையில், ஒருவரும் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் இருவரும் ஒன்றாக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதால், இரு தரப்பும் தனித்தனியே ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளது.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்












Click it and Unblock the Notifications