Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்சமாவது காமன்சென்ஸ் இருக்கா.. விஜய்யின் புதுச்சேரி விசிட்.. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலை போல தவெக புதுச்சேரியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி விஜய் புதுச்சேரி செல்ல உள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மாட்டின், கொஞ்சமாவது காமன் சென்ஸ் இருக்கிறதா. குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் கூட இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள். என்று தவெகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கி தேர்தல் வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். தமிழ்நாட்டுடன், புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் விஜய்யின் தவெகவும் புதுச்சேரியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

jose-charles-martins-slams-tvk-over-vijay-s-puducherry-visit

விஜய் புதுச்சேரி விசிட்

புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி ரோட்ஷோ மற்றும் பொதுக் கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறை ரோட்ஷோ நடத்த அனுமதி மறுத்துவிட்டது. ஆனாலும் தவெக தரப்பில் தொடர்ந்து ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள். தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும் புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ஆதவ் அர்ஜுனா மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். பாஜகவில் ஆக்டிவாக இருந்த ஜோஸ் சார்லஸ், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்றும், தவெக வுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தவெக ஆதவ் மற்றும் ஆனந்த் மீது அவர் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.

காமன்சென்ஸ் இருக்கா

இந்நிலையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் தான் புஸ்ஸி. ஆதவ் அர்ஜுனா இருவரும் புதுச்சேரியில் தான் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தை விட புதுச்சேரியில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். அங்கு என்ன செய்யவதென்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருந்தால் இங்கு கோட்டைவிட்டு விடுவார்கள். புதுச்சேரியில் ரோட்ஷோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது காமன் சென்ஸ் இருக்கிறதா. குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள் கூட இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள். புதுச்சேரியில் இருப்பது திறந்தவெளி சாக்கடை திட்டம். அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பாவது. ஏற்கனவே கரூரில் 41 உயிர்கள் பலியாகியுள்ளனர்.

ஊரைவிட்டு ஒளிந்து

அதன் பிறகு ஊரைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். அப்படியிருந்தும் மீண்டும் ரோட்ஷோ கேட்கின்றனர். இந்த நேரத்தில் ரோட்ஷோ வேண்டுமா என்பதை அவர்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கட்சி தலைவர் மக்களுக்கு எது நல்லது என்று யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். எனவே விஜய் புதுச்சேரி வரும்போது அவரை சந்திக்க திட்டமில்லை. கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியினருடன் கலந்து பேசி முடிவு செய்வோம். எங்கள் சிந்தனைகளுடன் ஒன்றுபடுவோருடன் கூட்டணி அமைப்போம். அப்படி இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+