எடப்பாடி, ஓபிஎஸ் பயணிப்பது அண்ணா வழியிலா, அண்ணாமலை வழியிலா..? கேட்கிறார் கே.சி.பழனிச்சாமி
சென்னை: அதிமுகவின் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணா வழியில் பயணிக்கிறார்களா இல்லை அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீண்ட நாளாகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன் தினம் திருப்பி அனுப்பினார்.
இதுகுறித்து முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் அதிமுகவும் பாஜகவும் அக்கூட்டத்தை புறக்கணித்துள்ளன.

கே சி பழனிச்சாமி
இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா முன்னெடுத்த நீட் எதிர்ப்பு போராட்டம், இன்று அதே கருத்தை வலியுறுத்தி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பா.ஜ.க. வழியில் அதிமுக புறக்கணித்தது சரியா? உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காணும் போது, பா.ஜ.க. வழியில் அ.தி.மு.க என்பது முழுமையாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தங்களது அடிமைத்தனத்திலிருந்து வெளியேறவில்லை என்பதைக் காட்டுகிறதா?

பாஜக
களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் எதிர்த்து அல்லவா நாம் வெற்றி காண வேண்டும். நீட் விவகாரத்தில் தி.மு.க., மற்றும் பா.ஜ.க.வின் தவறுகளை முன்னிறுத்தி, நீட் விலக்கு பெற ஜெயலலிதா எடுத்த முயற்சிகள், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு போன்றவற்றை முன்னிறுத்தி ஆளச் சிறந்த கட்சி அ.தி.மு.க. என்று பட்டியலிடுவது தானே அ.தி.மு.க. வேட்பாளர்களின் கள வெற்றிக்கும், அ.தி.மு.க.வின் எதிர்காலத்திற்கும், மீண்டும் ஆளுகிற வாய்ப்பை அ.தி.மு.க.விற்கு பெற்றுத்தருவதற்கும் சரியான முடிவாக இருக்கும்.

ஓபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். செய்கிற தவறால் தேர்தல் களம் பா.ஜ.க. v/s தி.மு.க. என்ற இந்துத்துவா, திராவிட கருத்தியலாகத் தேர்தல் களம் அமைந்துவிடாதா? தவறான தலைவர்களைக் கொண்டிருந்தாலும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. மீதான எதிர்ப்பில் என்றென்றும் ஒவ்வொரு அண்ணா தி.மு.க. தொண்டனும் உறுதியோடு இருக்கிறார்கள்.

விரைவில் சட்டசபை கூட்டத் தொடர்?
தொண்டர்களின் அந்த எண்ணத்தை பிரதிபலிக்காத தலைமை, விரைவில் புறக்கணிக்கப்படும் என்கிற உறுதியில் களம் காணும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்! என்று கே சி பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நீட் விலக்கு விவகாரத்தில் மீண்டும் தீர்மானத்தை கொண்டு விரைவில் சட்டசபை கூடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications