Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலாஷேத்ரா பாலியல் புகார்..உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு நீதிமன்றக் காவல்..புழல் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஹரிபத்மனை வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புழல் சிறையில் ஹரிபத்மன் அடைக்கப்பட்டார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி உள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்தக் கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

kalakshetra sexual harassment case professor Hari padman remanded in judicial custody till 13th

பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மாணவிகள் கூறவே கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவிகள் நடத்திய இந்த போராட்டம் சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலாஷேத்ரா விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மாணவிகள் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரி பத்மன் திடிரென தலைமறைவு ஆனார். இதனால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னையில் உள்ள தோழி வீட்டில் ஹரிபத்மன் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஹரிபத்மனை வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புழல் சிறையில் ஹரிபத்மன் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+