அபிநந்தன் நலமுடன் வருவார்.. குடும்பத்தாரிடம் போனில் பேசி நம்பிக்கையூட்டிய கமல்ஹாசன்
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனின் குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சென்னை: பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனின் குடும்பத்தாரிடம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளார். நேற்று மதியம் இவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.
" title="இந்திய விமானி அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்! " />இந்திய விமானி அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்!
பாகிஸ்தானின் எப் -16 ரக போர் விமானத்தை துரத்திக் கொண்டு சென்ற போது இவரின் மிக் - 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த இவர் அந்நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.
இவரை மீட்க வேண்டும் என்று இந்தியா கடுமையான கோரிக்கைகளை வைத்து வருகிறது. அதேபோல் அரசியல் தலைவர்களும் இவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் அபிநந்தனின் குடும்பத்தாரிடம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று அதிகாலை கமல்ஹாசன் போன் மூலம் அவர்களிடம் பேசியுள்ளார்.
வேறு எதையும் சொல்ல முடியாது.. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதும் தில் காட்டிய இந்திய பைலட்
அவர் வருவார்... நம்பிக்கையாக இருங்கள். அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும். அவரின் தைரியத்தை பாராட்டுகிறேன். முழு நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
அவர் கண்டிப்பாக நலமுடன் திரும்புவார், என்று போனில் கமல்ஹாசன் அவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அபிநந்தனின் குடும்பம் சென்னை மாடம்பாக்கத்தில்தான் வசித்து வருகிறது. தற்போது அவரின் வீட்டிற்கு வெளி நபர்கள் செல்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது.