கெஜ்ரிவால் அப்படி பேசி இருந்தால்.. அது தவறுதான்.. கமல்ஹாசன் கருத்து!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக மாணவர்களுக்கு எதிராகவோ இல்லை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ பேசி இருந்தால் அது தவறுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசி உள்ளார்.
Recommended Video
சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக மாணவர்களுக்கு எதிராகவோ இல்லை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ பேசி இருந்தால் அது தவறுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசி உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ கால் ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவால் ஆடியோவில் பேசி இருந்தார். அதில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த ஆடியோ பெரிய வைரல் ஆனது. இதற்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.
முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர். இதையடுத்து கெஜ்ரிவால் பேச்சு குறித்து தற்போது கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது பேட்டியில், மக்கள் ஆதரவு எங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. மக்களின் இந்த பெரிய ஆதரவு, எங்களுக்கு உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. பல்வேறு இடைஞ்சல்கள் எங்களுக்கு வந்தது. ஆனால் அதற்கு இடையிலும் மக்கள் பலர் வந்து மக்கள் நீதி மய்யத்திற்கு சாரை சாரையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்வது எதோ விளையாட்டு போல இருக்கிறது. இதை அரசியல் விளையாட்டு போலத்தான் நான் பார்க்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதை நாம் ஆராய வேண்டும்.
டெல்லிக்கு அவர் மாநில அந்தஸ்து கேட்கிறார். அதனுடைய அடிநாதமாக அது இருக்கும். நான் இதை போன் செய்து அவரிடம் நேரடியாக கேட்க முடியும். அவர், தமிழக மாணவர்கள் அங்கு வந்து வாய்ப்பு பெறும் போது, டெல்லி மாணவர்கள் அங்கு வாய்ப்பு பெற முடியாமல் இருப்பது குறித்து பேசி இருப்பார்.
மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக இப்படி பேசி இருப்பார். தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராக அவர் பேசி இருக்க மாட்டார். அவர் அப்படி பேசி இருந்தால் தவறுதான், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications