நற்சேவை நாயகா.. நன்றி.. மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டருக்காக இரங்கற்பா வெளியிட்ட கமல்ஹாசன்
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி திலக் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது புகழை பற்றி கமல்ஹாசன் தனது குரலால் ஒரு கவிதை புனைந்துள்ளார். திலக் புகைப்படத்துடன் தனது ஆடியோ பின்னணியுடன் ட்விட்டர் தளத்தில், இதுகுறித்து வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான குரலில் கமலஹாசன் கூறிய அந்த கவிதை இதுதான்: எந்த பதவியும் நாடாமல், நட்புக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம். நம் மையத்தின் அடிநாதம்.
கோவிட் கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின், உறவுகளுக்கு என் அன்பும் அனுதாபங்களும். திலக் தொண்டராக வாழ்ந்தார், தொண்டராக மாண்டார். நற்சேவை நாயகா.. நன்றி! இவ்வாறு கமலஹாசன் அதில் பேசியுள்ளார்.
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2020
நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும்.
நற்சேவை நாயகா...நன்றி. pic.twitter.com/x2DZD35TTv











Click it and Unblock the Notifications