நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை- கமல்ஹாசன்
சென்னை: நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரம் இல்லை. இது போன்ற கொடுங்கோன்மை அடங்கும் வரை எனது போராட்டம் ஓயாது.

ட்விட்டர்
ஆவணங்கள் அடிப்படையில் ஒருவரின் முன்னோரை நிர்ணயம் செய்வது தவறு. அதே ஆவணங்களின் அடிப்படையில் அவர்களை நீக்குவதும் தவறான செயலாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|
எதிர்ப்பு
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

திமுக அழைப்பு
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய தோழமை கட்சிக் கூட்டத்திலும் கமல்ஹாசன், ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 23-ஆம் தேதி திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனை நேரில் சந்தித்து திமுக அழைப்பு விடுத்தது.

மக்கள் நீதி மய்யம்
இந்த பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு சென்றுவிட்டதால் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications