களம் வரும் கமல்ஹாசன்.. நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்.. தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம்
சென்னை: நாளை மறு நாள் ஞாயிற்றுக்கிழமை முதல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை சீரமைப்போம் என்னும் உன்னதமான நோக்கத்துடன் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறுவதை குறிக்கோளாகக் கொண்டு கமல்ஹாசன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிசம்பர் 13ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பரப்புரையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை தீவுத் திடல் சத்தியவாணி முத்து நகர் பொதுமக்கள் வெளியேற்றம்- கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு
கமல்ஹாசன், சீமான் இருவரும் கூட்டணி வைக்கப்போவதாக தேர்தல் களம் பரபரத்துக் கிடக்கும் நிலையில், கியரை மாற்றி களத்தில் குதித்துள்ளார் கமல்ஹாசன். எனவே ஒரு பக்கம் கூட்டணி ஏற்பாடு மறுபக்கம், பிரச்சாரம் என சீறிப்பாய உள்ளார் உலக நாயகன் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.