வதந்திகளை நம்பாதீர்.. மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது.. கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: வதந்திகளை நம்பாதீர் என்றும் மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கினாலே அவருக்கும் இவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு அதில் குளிர்காய நினைக்கும் காலம் இது. இந்த நிலையில் ரஜினியை பாஜக ஆதரவாளர் என கூறிவந்தனர்.
அண்மையில் 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வி குறித்து ரஜினி பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அது போல் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்வதாக இருந்தது.
மக்கள் நீதி மய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2018
நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே.
இதையடுத்து கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்பது போன்ற கருத்துகள் உலா வந்தன. இதையடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்,
நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம்.
அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.