சஷ்டி சர்ச்சை..மதத்தை மாணவர்களிடம் திணிப்பதா? சேகர்பாபுவுக்கு எதிராக கொளத்தூர் மணி திவிக போராட்டம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நடத்திய முருகன் மாநாட்டு தீர்மானத்தின்படி மாணவர்களை கந்த சஷ்டி கவசம் பாட வைத்த அமைச்சர் சேகர்பாபுவைக் கண்டித்து கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னையில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில், "முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது" என்றும் "கந்தசஷ்டி விழாக் காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது" என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் முருகப்பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்களுக்கு அப்போதே பெரியார் இயக்கங்களும் இடதுசாரிகளும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் கந்த சஷ்டி பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 738 மாணவர்களுக்கு கந்த சஷ்டி பயிற்சி அளிக்கப்பட்டது; பயிற்சி பெற்ற மாணவர்கள் கந்த சஷ்டியை ஒப்புவித்தனர் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் "மாணவர்களிடம் மதத்தைத் திணிக்காதே" என்ற முழக்கத்துடன் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications