அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக அறிக்கை... மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் கராத்தே தியாகராஜன்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, மேயருக்கான சிறப்பு அதிகாரி-பாலங்கள் என்ற புதிய பதவியை எந்த விதியின் கீழ் உருவாக்கினார் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கராத்தே தியாகராஜன்.
அந்த அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளதோடு விமர்சிக்கவும் செய்துள்ளார்.

ஏழாம் பொருத்தம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலம் முதல் தற்போது வரை கராத்தே தியாகராஜனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. காங்கிரஸில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் எனக் கருதும் கராத்தே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறிக்கைள், பேட்டிகள் வாயிலாக அவரை சீண்டி வருகிறார். அந்த வகையில் தற்போது மாநகராட்சி பொறியாளர் இடமாற்றம் விவகாரத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கைக்கு வாலன்ட்ரியாக வந்து பதில் அளித்துள்ளார் கராத்தே தியாகராஜன்.

திமுக -அமைச்சர்
சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் புகழேந்தியை நகராட்சி ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எப்படி நியமித்தார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சிபிஐ விசாரணைக்கு தயாரா எனவும் சவால் விட்டிருந்தார். அதற்கு அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், கே.என்.நேரு மிக காட்டமான அறிக்கை வெளியிட்டு அதில் அமைச்சர் வேலுமணியை கடுமையாக சாடியிருந்தார்.

எந்த விதியின் கீழ்?
இந்நிலையில் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் மீது கோபத்தில் இருக்கும் கராத்தே தியாகராஜன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''அண்ணன் ஸ்டாலின் மேயராக இருந்தபோது மேயருக்கான சிறப்பு அதிகாரி-பாலங்கள் என்ற புதிய பதவியை உருவாக்கி அவருடைய நண்பர் ராஜாசங்கரை நியமித்தார். இந்த நியமனத்திற்கு எந்த அரசாணையும் கிடையாது, மன்றத்தின் ஒப்புதலும் கிடையாது. இந்த பதவியை அவர் எப்படி வழங்கினார். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம்'' என வினவியுள்ளார்.

பலமுறை பதில்
மு.க.ஸ்டாலினை விமர்சித்து கராத்தே தியாகராஜன் அறிக்கை வெளியிடுவது புதிதல்ல, ஏற்கனவே பலமுறை ஸ்டாலினை சாடி, விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போது ரஜினியின் ஆதரவாளர், ஆலோசகர் என்ற நிலையில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்? -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications