“கர்தவ்ய த்வார்”.. திருச்சி ரயில்வே அலுவலக நுழைவுவாயில் இந்தியில் பெயர்! பொங்கி எழுந்த சு.வெங்கடேசன்
சென்னை: திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலில் "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இந்தி திணிப்பு முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கர்தவ்ய த்வார் என தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு புரியாத வகையில் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே.
"கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் "கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை "இந்தித் திணிப்பு" மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்." என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications