332244 என்று சொன்னால் ஹெச்.ராஜா புரிந்துகொள்வார்... கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
திருச்சி: பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு தாம் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புவதாகவும், 332244 என்பதை அவர் மறந்திருக்க மாட்டார் என்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து தனது தொகுதியான சிவகங்கை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் அவர் இதனைக் கூறினார்.
மேலும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கும் விவகாரத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கலாய்த்த கார்த்தி
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரத்திடம், அடுத்தது நீங்கள் தான் கைதாக போகிறீர்கள் என ஹெச்.ராஜா கூறுகிறாரே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கார்த்தி, ஹெச்.ராஜாவிடம் ''332244'' என்பதை மட்டும் கூறுங்கள் போதும், அவர் புரிந்துகொள்வார் எனவும் பதில் தந்தார்.

2019 தேர்தல்
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட ஹெச்.ராஜா, மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதைக் குறிப்பிடும் வகையில் கார்த்தி சிதம்பரம் இந்த கோர்ட் வார்டை தெரிவித்தார்.

போராட்டம்
ஹாங்காங், சிலி போன்ற நாடுகளில் எப்படி தன்னெழுச்சியாக போராட்டம் நடைபெறுகிறதோ அதைப் போல் இங்கும் தார்மீக அடிப்படையில் சமூக ஆர்வலர்கள், மானவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

கடும் விமர்சனம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற அதிமுகவும் ஒரு காரணம் என்றும், சில மாநிலக் கட்சிகள் பாஜகவின் கைகூலிகளாக உள்ளதால் ராஜ்யசபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications