கருணாநிதியின் கோபாலபுரம் வீடு! அமெரிக்காவிலிருந்து வந்து சுற்றிப்பார்த்த முதல் உரிமையாளர் பேத்தி!
சென்னை: கடந்த 1955ஆம் ஆண்டு கருணாநிதிக்கு கோபாலபுரம் வீட்டை விற்ற, அதன் முதல் உரிமையாளரின் உறவினர்கள் அமெரிக்காவிலிருந்து வந்து தங்கள் தாத்தா கட்டிய இல்லத்தை சுற்றிப்பார்த்து நெகிழ்ந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினும் பெருந்தன்மையாக அவர்களை கோபாலபுரம் இல்லத்திற்குள் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி மகிழ்ந்தார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த அவர்கள், வீடு அப்படியே இருப்பதாகவும் முதல்வரே நேரடியாக வந்து தங்களை சுற்றிக்காட்டியது வியப்பை தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பலரது கனவு
''வீடு என்பது பலரது கனவு!கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன.எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு!தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.''

கோபாலபுரம் வீடு
''இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு. சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.''

நட்புப் பாலமாய்
''அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

நெகிழ்ச்சி பதிவு
இதனிடையே கோபாலபுரம் இல்லத்தை சுற்றிப்பார்த்தது பற்றி நெகிழ்ச்சியுடன் கூறும் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன், தங்களை முதலமைச்சரே நேரில் வந்து வீட்டை சுற்றிக்காட்டியது மகிழ்ச்சி தருவதாகவும் முதல்வர் குடும்பத்தினரை அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications