சென்னையில் அசத்தல்.. கின்னஸ் சாதனை படைத்த திமுகவின் கருணாநிதி நினைவு மாரத்தான்.. எப்படி தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் நடந்த கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்து அசத்தி உள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னையில் இன்று கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ, 42 கிமீ என்ற அளவில் தனித்தனியே மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியை அமைச்சர்கள் கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து போட்டி தொடங்கியது. அதன்பிறகு காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
42 கிமீ, 21 கிமீ பிரிவில் ஓடி வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. 10 கிமீ பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. 5 கிமீ பிரிவில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

இதற்கிடையே இந்த போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் பரிசு வழங்கும் விழாவின்போது முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதாவது இந்த கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் இந்த ஆண்டு முன்பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி கிடைத்த நிலையில் போட்டியில் அரசு அதிகாரிகள், திருநங்கைகள், ஆண்கள், பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என 73,206 பேர் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடினர்.அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியால் இன்று சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பரிசு வழங்கும் விழாவில் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளாமனவர்கள் பங்கேற்றனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications