18000 புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது என்னவானது? அதிகாரிகள் வேகமாக இயங்கணும் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: பாழடைந்த பள்ளிக்கட்டிடங்கள் என்ன வேகத்தில் இடிக்கப்பட்டதோ அதே வேகத்தில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட சமீபநாட்களாக இவரது அறிக்கைகள் அனைத்தும் அனல் பறக்கும் வகையிலும் அரசை விமர்சிக்கும் வகையிலும் உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பள்ளிக் கட்டிடங்கள்
கடந்த வருடம் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த போது தமிழகம் முழுதும் சிதிலமடைந்த ஆயிரக்கணக்கான பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. பராமரிக்க முடியும் என்று தெரிந்த கட்டிடங்களைக் கூட புதுக் கட்டிடம் கட்டப்படும் என்ற வாக்குறுதிகளோடு பல கட்டிடங்கள் இடிக்க முடிவெடுத்து இடிக்கப்பட்டன. திரும்ப அவற்றை கட்டுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட வேண்டும்.

நல்ல முன்னெடுப்பு
இப்போது பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்ற நடைமுறைகளில் பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்ல முன்னெடுப்பு தான், ஆனால் மாற்று ஏற்பாடுகளுக்கான திட்டங்கள் இல்லாமல் இடிக்கப்படும் போது பள்ளிக் குழந்தைகள் மரத்தடியில் கல்வி கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

18000 புதிய வகுப்பறைகள்
பள்ளிக் கட்டிடங்களை பொறுத்தவரை அதனுடைய அத்தியாவசியம் கருதி நடவடிக்கைகள் வேகப்படுத்த வேண்டும். சென்ற நிதிநிலை அறிக்கையில் 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டது. அந்த சிறப்பான திட்டங்களை வேகப்படுத்தி நிறைவேற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாற்று ஏற்பாடுகள்
புதிய மாற்று ஏற்பாடுகளை தயார்படுத்தி வைத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிக்கல்வி என்பது தமிழகத்தின் எதிர்கால தலைமுறையை திறனுள்ளதாக உருவாக்கக் கூடியது. பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான நிதி உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் கவனத்தோடு சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டால் இப்போது நடக்கின்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications